சுயாதீன பாராளுமன்ற நியமங்கள் அதிகார சபைக்கு அங்கீகாரம்!

சுயாதீன பாராளுமன்ற நியமங்கள் அதிகார சபையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகின் பல நாடுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிமுறையை நடைமுறைப்படுத்த ஒரு சுயாதீன அமைப்பை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
அதன்படி, பிரதமரும், நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சபாநாயகர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைப் பெற்று, அந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட அடிப்படை வரைவு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புக்கூறல், நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் தொழில்முறை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது, சட்டமன்றத்தின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மை ஆகியவற்றில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத காரணியாகும் என்று அரசாங்கம் கூறுகிறது.



