லூடன் விமான நிலைய தீவிபத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரித்தானியாவின் லூடன் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Luton விமான நிலையத்தில் கார் நிறுத்துமிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களின் பின் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.