போதைப் பொருட்களை ஏற்றிச்சென்ற மீன்பிடிப் படகு முற்றுகையிடப்பட்டது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்தக் கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பலநாள் மீன்பிடி படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.