இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24.10) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மிற்றர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சில மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என்றும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.