அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது, அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட்டது ஜனாதிபதியின் ‘தவறான முடிவு’ என்று கூறியுள்ளது.
இது தொடர்பில் இன்று (23.10) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்லவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தவறான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சாடியுள்ளார்.
“அமைச்சர் கெஹலிய மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வது சரியானது என்று ஜனாதிபதி நினைத்திருக்க வேண்டும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பான அரசியல் கட்சியின் கரிசனை ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) இரண்டு உறுப்பினர்களை அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத இரண்டு பதவிகளுக்கும் நியமித்தமை தொடர்பில் கட்சியின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.



