மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் பென்டகன்!

அமெரிக்கா ஒரு டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பு மற்றும் கூடுதல் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு பட்டாலியன்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், அவற்றின் ஆதரவுக் கப்பல்கள் மற்றும் சுமார் 2,000 கடற்படையினர் உட்பட சமீபத்திய வாரங்களில் கணிசமான அளவு கடற்படை சக்தியை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ஈரான் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகளுக்கு வாஷிங்டன் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது.
இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை, அதிகரித்து வரும் மோதல்களில் அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



