மூன்று முன்னாள் இராணுவத் தலைவர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமனம்
#SriLanka
#Sri Lankan Army
#Foriegn
#Ambassador
#Military
#officer
Prasu
2 years ago
இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவும், இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வு) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கியூபா குடியரசு உயர் பதவிகளுக்கான குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேபாளத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) சுதர்சன் கரகொட பத்திரனவை நியமிப்பதற்கும் பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.