விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியில் ஈடுபட்ட தம்பதியினர்
#wedding
#Thaiwan
#couple
#Awareness
#Trash
Prasu
2 years ago
தைவானைச் சேர்ந்த ஒரு தம்பதி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தம்பதி கண்ணுக்கு அழகாகத் தெரியும் இடங்களில் திருமணப் புகைப்படங்களை எடுப்பதற்குப் பதிலாகக் குப்பைகளுக்கு மத்தியில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் புகைப்படங்களை அவ்வாறு எடுத்ததற்கான காரணத்தை மணப்பெண் தமது Facebook பக்கத்தில் வெளியிட்டார். தைவானில் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவற்காகவே இவ்வாறு புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பிறர் அந்தப் புகைப்படங்களைக் கண்டு கழிவுகளைக் குறைப்பதற்காகவும் அவ்வாறு செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்