மருந்தாளர் பற்றாக்குறை - நிதி அமைச்சு வழங்கியுள்ள ஒப்புதல்!
#SriLanka
#Hospital
#Medical
PriyaRam
1 year ago

மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் செய்வதில் கடும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மருந்தாளர்கள் பலர் வெளிநாட்டு வேலைகளை தேடிச் செல்வதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் நடத்திய விசாரணையில், மருந்தாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



