தரக்குறைவான மருந்துகளால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Sri Lanka President
#drugs
Mayoorikka
2 years ago
தரக்குறைவான மருந்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தரக்குறைவான மருந்துகளை பாவிப்பதனால் நோய் நிலைமைகள் மோசமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

இலவச சுகாதார சேவையில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.
இன்று மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரசபையானது மோசடிகளின் கூடாரமாக மாறியுள்ளது எனத் தெரிவித்த அவர், தற்போதைய சுகாதார அமைச்சரின் காலம் இந்த நாட்டில் சுகாதார சேவையில் மிகவும் வினைத்திறன் அற்ற காலகட்டம் எனவும் தொடர்ந்தும் தெரிவித்தார்.