தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க ஈரானில் தடை

#children #Iran #School Student #language #Banned
Prasu
1 year ago
தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க ஈரானில் தடை

மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க ஈரான் தடை விதித்துள்ளது,

இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும் என்று அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, 

ஏனெனில் இந்த வயதில், குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது,” என்று கல்வி அமைச்சக அதிகாரி திரு மசூத் தெஹ்ரானி-ஃபர்ஜாத் கூறினார், இஸ்லாமிய குடியரசு ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதித்துள்ளது, 

இருப்பினும் இது இடைநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது. “வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்கான தடை ஆங்கிலம் மட்டுமல்ல, அரபு உள்ளிட்ட பிற மொழிகளையும் பற்றியது” என்று திரு தெஹ்ரானி-ஃபர்ஜாத் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!