4.2 மில்லியன் ரூபா பணமோசடி செய்த பெண் கைது
#SriLanka
#Arrest
#Women
#Job Vacancy
#money
#Foriegn
#Fraud
Prasu
2 years ago
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி 4.2 மில்லியன் ரூபா பணமோசடி செய்த பெண் ஒருவர் நேற்று (16) பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடையவராவார். இவருக்கு எதிராக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஆறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .