நாட்டில் அரிசி தட்டுப்பாடா? : விவசாய அமைச்சர் விளக்கம்!
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அரிசி இருப்புக்களை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எத்தனை அரிசி கையிருப்புகளை மறைத்து வைத்தாலும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம்.
எங்களுக்கு அரிசி தட்டுப்பாடு இல்லை. ஆனால் விவசாயிகள் பற்றாக்குறை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.



