ஒரே பட்டை – ஒரே பாதை” இன்று ஆரம்பமாகுகிறது!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16.10) காலை பீஜிங்கை சென்றடைந்தார். அங்கு ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று (17.10) ஆரம்பமாகவுள்ள “ஒரே பட்டை – ஒரே பாதை” உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
குறித்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 30 உலகளாவிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.



