யாழில் மர்மாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!
#SriLanka
#Jaffna
#Arrest
#Police
#Murder
#Investigation
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவற்குழி - ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 23 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறின்போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து, தப்பிச் சென்றதாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து, யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.