நீடிக்கும் மழையுடனான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நீடிக்கும் மழையுடனான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கனமழை மற்றும் தென்கிழக்கு பருவமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்த அறிவிப்பு அக்டோபர் 17 முதல் 20 வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

 அந்த காலப்பகுதியில், தீவின் தென்மேற்கு பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

 சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வெப்பமண்டல ஒன்றிணைப்பு பருவமானது தீவின் காலநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அதன் தாக்கங்கள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் தீவின் தற்போதைய மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!