கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை
#SriLanka
#doctor
#Health Department
Prathees
1 year ago

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லன மற்றும் மேலும் இரு சுகாதார சங்க தலைவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
டொக்டர் ருக்ஷான் பெல்லன, டாக்டர் சமல் சஞ்சீவ மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஆகியோரிடம் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் விசாரணை குழு எதிர்வரும் 16ஆம் திகதி கூடவுள்ளது.



