சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

#SriLanka #IMF #money
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு உத்தியோகபூர்வ குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 நாட்டின் வரிக் கொள்கை மற்றும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில தாமதமான கடமைகளுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட ஏனைய பொருளாதார காரணிகள் மீது கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் என்று அறியமுடிகிறது.

 முந்தைய ஐஎம்எப் குழுவினால் முன்னிலைப்படுத்தப்பட்ட நிதி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களில் அடுத்த வார இறுதியில் இறுதி முடிவை எட்டுவதற்கு அதிகாரிகள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

 இதேவேளை, மொரோக்கோவில் நடைபெறவுள்ள உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வருடாந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் இலங்கைப் பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டுள்ளது.

 மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சுப்ரமணியனை சந்தித்ததாக மொரோக்கோவில் உள்ள தூதுக்குழுவை வழிநடத்தும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை மேற்கோள்காட்டி நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

 சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உலக வங்கி இலங்கைக்கு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களின் வெற்றிக்கு உலக வங்கி வழங்கிய ஆதரவுக்கு இலங்கை குழு நன்றி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!