இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் 40 வெளிநாட்டவர்கள் பலி: பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள பல அமெரிக்கர்கள்

காஸாவில் செயற்படும் ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் 40 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல வெளிநாட்டவர்கள் காசா பகுதிக்கு ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸால் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறிப்பிடப்படவில்லை.
எவ்வாறாயினும், முழு எச்சரிக்கையும் இன்றி இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு விமானத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பு தனது காவலில் உள்ள பணயக்கைதிகளில் ஒருவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களால் உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 12 தாய்லாந்து, 10 நேபாள, 09 அமெரிக்கர்கள், 02 உக்ரைனியர்கள், 02 பிரெஞ்சு பிரஜைகள் ஒரு ரஷ்யன்,ஒரு பிரிட்டன், ஒரு கனடியன், ஒரு கம்போடியன், மூன்று பிரேசிலியர்கள், இரண்டு இத்தாலியர்கள், இரண்டு மெக்சிகன்கள் மற்றும் ஒரு அயர்லாந்துக்காரர்அடங்குகின்றனர்.
பல ஜேர்மனியர்கள், மூன்று பிரேசிலியர்கள், இரண்டு கனேடியர்கள், நான்கு ரஷ்யர்கள், 14 பிரெஞ்சு மற்றும் 11 தாய்லாந்து நாட்டவர்களும் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேலில் இருந்த சுமார் 150 அமெரிக்கர்களை காஸா பகுதிக்கு ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் 900 பேர் இறந்துள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் 690 காசா மக்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



