கடும் மழையுடனான காலநிலை : சுகாதார சீர்கேடுகள் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!
#SriLanka
#doctor
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் சேர்க்கப்பட்டுள்ளதால், காய்ச்சிய நீரை அருந்துவது மிகவும் ஏற்றது என வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பருப்பு வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



