இலங்கையின் சில பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
இலங்கையின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.