கோபா குழு முன் முன்னிலையாகவுள்ள கலால் திணைக்கள அதிகாரிகள்!
#SriLanka
#Parliament
PriyaRam
1 year ago

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு முன் முன்னிலையாக உள்ளனர்.
அதற்கமைய இன்று வியாழக்கிழமை அவர்கள் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் போது, முன்னேற்ற ஆய்வு, வரி வசூல் மற்றும் பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



