உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நடந்தது என்ன?

#SriLanka #Court Order #Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Judge
Kanimoli
1 year ago
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நடந்தது என்ன?

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்கள் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்துள்ளார். 

 இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு, 

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

 அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர். 

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) எனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார். 

 குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவியை துறந்துள்ளேன். 

 இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். 

அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியள்ளாரா அல்லது யாரும் அவரை கடத்தி வைத்துள்ளனரா என்ற தகவல் ஒன்றும் தெரியவில்லை. நாட்டில் நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லையென மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/1695912426.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!