விமர்சனங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த கனடிய நாடாளுமன்ற சபாநயகர்

#Parliament #Canada #Resign #speaker #criticizing
Prasu
2 years ago
விமர்சனங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த கனடிய நாடாளுமன்ற சபாநயகர்

கனடா நாடாளுமன்ற சபாநயகர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, அவர் ராஜினாமா செய்துளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் கனடா சென்றார்.

அங்கு, கனடா நடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடால்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ உள்பட அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி மரியாதை செலுத்தியதால் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டாவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

 இதையடுத்து நேற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்தார்.இதனையடுத்து துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4