வடகொரியாவுக்கு எதிரான தடையை ரத்துச் செய்த தென் கொரிய நீதிமன்றம்

#government #NorthKorea #SouthKorea #Ban
Prasu
1 year ago
வடகொரியாவுக்கு எதிரான தடையை ரத்துச் செய்த தென் கொரிய நீதிமன்றம்

வட கொரியா அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பலூன்கள் மூலம் தென் கொரியாவில் இருந்து அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தை தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது.

இந்தத தடைச் சட்டமானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறியே நீதிமன்றம் அந்த சட்டத்தை இரத்து செய்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகள் தமது நாட்டின் மீது போர் கொடுப்பதற்கான ஒத்திவைக்கள் என வடகொரியா கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரிய சக்தி வாய்ந்த ஏவுகணை பரிசோதித்து வருகிறது.

இதன் காரணமாக தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகிறது.

 இவ்வாறான நிலைமையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தென் கொரியாவில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மூன் ஜே- இன் தலைமையிலான மிதவாத அரசாங்கம், வடகொரியாவுடன் அமைதியான போக்கை கடைபிடித்து வந்தது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!