ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளை அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்

#SriLanka #Police #Attack #Lanka4
Prathees
1 year ago
ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில்  பொலிஸ் கான்ஸ்டபிளை அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்

ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை காதில் அறைந்த ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதமையால் நீர்கொழும்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் ஏமாற்றமும் சங்கடமும் அடைந்துள்ளனர்.

 கடந்த 24 ஆம் திகதி காலை 7 மணியளவில் புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடை அணிந்து ரத்தலோகம நகர வீதிகளை பார்வையிடுவதற்காக குறித்த இடத்திற்கு சென்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 அந்த இடத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை வரவேற்காமல், தாமதமாக பணிக்கு வந்ததாக பொலிஸ் கான்ஸ்டபிளின் காதில் அடித்ததாகவும் பொலிஸ் போடோ மேலும் தெரிவித்தார்.

 புதிய பொலிஸ் கான்ஸ்டபிளை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதைக் கண்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனது கைத்தொலைபேசியில் ரத்தொலுகம பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 தாக்குதலுக்கு உள்ளான ரத்தொலுகம பொலிஸில் கடமையாற்றும் புதிய பொலிஸ் கான்ஸ்டபிளும் சம்பவம் தொடர்பில் ரத்தொலுகம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவித்துள்ள போதிலும் நிலையத் தளபதியும் மௌனக் கொள்கையை கடைப்பிடிப்பதாக பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 தாக்குதலுக்கு உள்ளான புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் மிகவும் அவமானத்துடனும் மன அழுத்தத்துடனும் காணப்பட்டதாகவும் காதில் அடிபட்டதால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!