யாழில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை  பகுதியில் மூன்று மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

குழந்தையின் தாய் கடந்த 23ஆம் திகதி இரவு பாலூட்டும் போது பால் புரைக்கேறிய நிலையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தாய்பால் குழந்தையின்  நுரையீரலில்  சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!