பாரிஸில் ஆரம்ப பாடசாலையில் குடியேறிய அகதிகள்!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பரிஸில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் Guinea நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் குடியேறி அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அகதிகள் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகரத்தின் மேயர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



