ஐ.நா பொதுசபை அமர்வில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
ஐ.நா பொதுசபை அமர்வில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21.09) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் உரையாற்ற உள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது.  

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் "2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் நிறுவுதல்" என்பதாகும்.  

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்து நேற்று (20.09) நடைபெற்ற காலநிலை அபிலாஷைகள் தொடர்பான மாநாட்டிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் முன்வைத்துள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். 

காலநிலை பிரச்சினைகளால் 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமும் பத்தில் ஐந்து சதவீதமும் இழக்கப்படும் என நிபுணர்கள் கணித்துள்ளதாகவும், எனவே இலங்கையின் காலநிலை தழுவல் திட்டத்திற்கு இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 காலநிலை சவால்களுக்கு தீர்வு காண உலகளவில் இரண்டு வலுவான நடவடிக்கைகளை இலங்கை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.