கீரி சம்பா தட்டுப்பாடு: பின்னணியில் உள்ள மாபியா

இந்த நாட்களில் கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சில்லறை விற்பனைக் கடைகளில் 290-300 ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரிச் சம்பா ஒரு கிலோவுக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 260 ரூபாய் என சில வாரங்களுக்கு முன்பு அரசு நிர்ணயித்தது.
அதே நேரத்தில் மொத்த மற்றும் சில்லறை கடைகளில் கீரி சம்பா அரிசி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும், மொத்த விற்பனை கடைகளுக்கு, 280 - 300 ரூபாய் வரையிலான விலையில், கீரி சம்பா அரிசியை வழங்குகின்றனர், அதன்படி, சில்லறை கடைகளில், 310 - 320 ரூபாய் வரையிலான விலையில், கீரி சம்பா விற்கப்படுகிறது.
அரசு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம் செய்துள்ளதால், சில வியாபாரிகள் கீரி சம்பாவை மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர்.
சுமார் ஓராண்டுக்கு முன்னர் கீரி சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததால் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காண முடிந்தது.
இதற்கிடையில், ஒரு குறிப்பிட்ட பிரபல அரிசி உற்பத்தியாளர் விவசாயிகளிடமிருந்து கீரி சம்பாவை அதிக அளவில் வாங்கி அரிசி ஏகபோகத்தை உருவாக்கி, அதே நேரத்தில் கீரி அரிசியை மறைத்து விடுகிறார் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழிலும் நெருக்கடியில் உள்ளதாகவும், உணவு விற்பனை வேகமாக சரிவடைந்துள்ளதாக ஹொட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



