இலங்கையின் இன்றைய வானிலை!
#SriLanka
#weather
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையின் ஒருசில பகுதிகளில் இன்று (21.09) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



