விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பான புகைப்படம் விரைவில் வெளியீடு!

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பிலான செய்திகள் ஓய்ந்தபாட்டில்லை.
அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவருடைய இறந்த புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் தயாமாஸ்ட்டர் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்ட போராளிகளோடு தலைவரும் அவரது குடும்பத்தினரும் இறந்தது விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் தலைவரின் புகைப்படத்தினை மட்டுமே இறந்ததாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் தொடர்பில் எந்தவிதமான தகவல்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்த முன்னாள் உறுப்பினர்கள் சிலர், தலைவரது குடும்பம்பத்தினர் இறந்ததாகவும், அவரது மனைவி மற்றும் மகள் இறுதி யுத்தத்தில் இறந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தாம் வைத்திருப்பதாகவும் சில தினங்களில் வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
குறித்த புகைப்படத்தில் தலைவரின் மகள் மற்றும் மனைவி இறந்த நிலையிலும் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு சடலங்கள் அலங்கோலமாக காட்சி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனை வெளியிடுவதற்கு பல முக்கியஸ்தர்களின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களது ஆலோசனைகள் பெறப்பட்டதும் சில தினங்களில் குறித்த புகைப்படத்தினை வெளியிட உள்ளதாகவும் குறித்த படத்தினை வைத்திருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த புகைப்படத்தினை வெளியிடும் பட்சத்தில் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பிலான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதும் நிதர்சனம்.



