நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்ப ஆயத்தம்

சுகாதாரத்துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையால் மருத்துவப் பயிற்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவப் பயிற்சிக்காக வெளிநாடுகளில் உள்ள சுமார் 600 வைத்தியர்கள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் இலங்கைக்குத் திரும்ப உள்ளனர்.
இதன்படி மீண்டும் வைத்தியசாலை சேவையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் பணியமர்த்தும் தீர்மானம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 63 வயதில் ஓய்வுபெறும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
அவ்வாறான வைத்தியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு அமைய ஓய்வு பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அப்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 02 வருட காலத்திற்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இதேவேளை, ஓய்வுபெற்ற வைத்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டால், நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சும் நிறுவன சட்டவிதிகளின் பிரகாரம் செயற்படுவதில் அக்கறை செலுத்த வேண்டுமென அதன் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.



