யாழை முற்றிகையிடும் போதைக்கு எதிர்ப்பான போராட்டத்திற்கு மக்களை ஆதரவு கோரும் ஏற்பாட்டாளர்கள்.

இலங்கையில் போர் ஓய்ந்த பின்னர் துப்பாக்கி சூட்டு கலாசாரம் குறைந்ததையிட்டு மக்கள் பாதுகாப்பாக இருந்தாலும் வாழ் நாளை நின்று கொல்லும் ஆயுதமாக போதைப்பொருள் உருவெடுத்துள்ளது. தமிழ் ,சிங்களம்,இஸ்லாம் என பாகுபாடு பார்க்காமல் விற்பனை செய்வோரும் நுகர்வோரும் அதிகரித்துச் செல்கிறது.
இதை தடுக்க பல வழிகளை மேற்கொண்டபோதும் சில பாதுகாப்புக்களோடும் பெரிய வசதிபடைத்தவர்களின் ஆதரவோடும் தொடர்கிறது. தற்பொழுது இதை அடக்க மக்கள் பூனைக்கு மணி கட்டியது போல வீட்டில் இருந்துகொண்டு எதிர்த்து தற்பொழுது தெருவிலே இறங்கி விட்டனர்.
மக்களே! போதையை ஒழித்தால் மட்டுமே உங்கள் பிள்ளைகளும் அடுத்தவர் பிள்ளைகளும் திருந்துவார்கள். எனவே, மக்களே! இவர்களுக்கு துணையாக ஆதரவு தரவேண்டுமென lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது. நெஞ்சை நிமிர்த்தி பீரங்கிக்கே அஞ்சாத நெஞ்சங்கள் நாம் குரல் கொடுப்போம்.
நாட்டையே காப்பாற்றுவோம்.
வெற்றி நிச்சயம் இப்போராட்டம் நாடு முழுக்க நடக்கட்டும்.
“அகிம்சையால் அகிலத்தையும் வெல்லாம்”



