மிசோரம் மாநிலத்தில் ரூ.87 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்
#Death
#world_news
#2023
#Breakingnews
#Died
Mani
1 year ago

மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் எல்லைப்பகுதி அருகே அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.60 கோடி மதிப்புள்ள சுமார் 2 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் ரூ.27.8 கோடி மதிப்புள்ள 3.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் சுமார் ரூ.87 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



