விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி! விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிப்பு

#SriLanka #Arrest #Airport #Crime #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி! விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவ மேலதிக விசாரணைக்காக மேற்கு வடக்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரை அழைத்து வந்ததையடுத்து மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவை சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 திட்டமிட்ட குற்றவியல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான சஞ்சீவ குமார சமரத்ன அல்லது கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க நேற்று மாலை 6 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 அப்போதுதான் அவர் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தார். சேனாதிரகே கருணாரத்ன என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

 பின்னர், குடிவரவு அதிகாரிகள் சஞ்சீவாவை கணேமுல்லவில் உள்ள மேற்கு வடக்கு மாவட்ட குற்றப்பிரிவில் ஒப்படைத்தனர்.

 அதன் பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பில் இரவு 11.30 மணியளவில் பேலியகொடையில் உள்ள மேற்கு வடக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!