இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!
#India
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை இந்தியா நியமித்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெல்ஜியத்தில் இந்திய தூதராக பணியாற்றி வரும் இவர், இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது கோபால் பாக்லே பணியாற்றி வருகின்ற நிலையில் அவருடைய பதவிக்காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.