ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய கான்ஸ்டபிள் தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Police #Investigation #Escape
Prathees
1 year ago
ஹரக் கட்டா  தப்பிச் செல்ல உதவிய  கான்ஸ்டபிள் தொடர்பில் வெளியான தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தீப குணசேகர காணாமல் போய் மூன்று நாட்களாகின்றன.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலை, சேருவிலவில் உள்ள அவரது வீட்டிற்கு, சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டதாக, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தாம் எவ்வித சிரமமுமின்றி வெளி நாட்டில் இருப்பதாக பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 கடந்த திங்கட்கிழமை அவர் தனது வீட்டிற்கு வாட்ஸ்அப் மூலம் போன் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான வாயிலில் இருந்து வெளியே வந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் அவர் எப்படி அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார் என்பதும் இதுவரை வெளியாகவில்லை.

 அவர் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான வாயிலை விட்டு வெளியே ஓடுவதும் அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

 இதேவேளை, ஹரக் கட்டாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது அவரது காதலி என கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தெரிந்திருந்ததாகவும் விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, ஹரக் கட்டாவிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டிருந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர், நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோருக்கு தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 இதேவேளை, கடந்த 10ஆம் திகதி தப்பிச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக காயமடைந்ததாகக் கூறப்படும் ஹரக் கட்டா, சட்ட வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

 இரண்டு விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!