லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#world_news
#Flood
#sri lanka tamil news
Thamilini
2 years ago
லிபியாவை பாதித்த வெள்ளத்தில் சிக்கி 2,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் நிவாரணப் படையினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டுச் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியாவில் உள்ள தர்னா நகரம் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டேனியல் புயல் தாக்கியதில் தர்ணாவில் இரண்டு அணைகள் மற்றும் நான்கு பாலங்கள் இடிந்து நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.