மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்வு
#Death
#world_news
#Earthquake
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த 8-ந் தேதி ஒரு பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும், மலையோர கிராமங்கள் அனைத்தும் அழிந்தன.
நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2800-யை தாண்டிள்ளது. அதே நேரத்தில் 2500 க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களை கடந்தும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.



