எஸ்டேட் நிர்வாகம் சார்பில் குடியிருப்புகளை நாசப்படுத்தும் குண்டர்கள்! மலையகத்தில் அவலம்

மலையக தமிழர்களை எஸ்டேட் நிர்வாகத்தினர் அடிமைகளாக நடத்துவதாக வெள்ளந்துரா எஸ்டேட் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில குண்டர்களினால் வெள்ளந்துரா எஸ்டேட் பகுதியில் சில வீடுகள் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் 2 அலுவலகத்திற்கு முறைப்பாடு செல்ல சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள் ளனர்
தோட்டத் தொழிலாளர்கள் 2 அலுவலகத்திற்குச் செல்லும் போது செருப்பு அணிந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனால் சிங்கள மக்கள் சென்றால் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் ஒரு தேயிலை செடிக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் ஆனால் அங்கு வசித்த சிலரின் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மலையக தமிழர்கள் எப்போது உரிமையோடு வாழ்வார்கள்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



