துப்பாக்கி வன்முறையை தவிர்க்க அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை!
#Meeting
#America
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 6ம் தேதி அல்புகர்க் பகுதியில் உள்ள கூடைப்பந்து மைதானம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் துப்பாக்கி வன்முறையை தடுக்கும் வகையில் புதிய நிர்வாக உத்தரவை நியூ மெக்சிகோ கவர்னர் பிறப்பித்துள்ளார். அடுத்த 30 நாட்களுக்கு நியூ மெக்சிகோவிற்குள் துப்பாக்கிகளை கொண்டு செல்வதை இந்த உத்தரவு தடை செய்கிறது, அதன் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எந்தவொரு சட்டரீதியான சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.



