இலங்கையில் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்கொலை செய்துக்கொள்வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது தற்கொலை செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பணவீக்கம் அதிகரித்த நிலையில், ஸ்திரமற்ற பொருளாதார நிலை, வேலையின்மை பிரச்சினை உள்ளிட்ட காரணங்கள் தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய மனநல மருத்துவ ஆலோசகர், சத்துரி சுரவீர இலங்கையில் சுமார் 3,000 தற்கொலை வழக்குகள் பதிவாகுவதாகவும், ஒவ்வொரு நாளும் சுமார் எட்டு முதல் ஒன்பது வழக்குகள் பதிவாகுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பூச்சிக்கொல்லிகளை உட்கொள்வதால் தற்கொலை செய்துகொள்வதும், மருந்துகளை அதிகமாக உட்கொள்வதும் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள மனநல ஆலோசகர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்பவர்கள், மற்றும் பிற உடல் ரீதியான தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



