மொரோக்கோவிற்கு மீட்பு குழுக்களை அனுப்பும் ஸ்பெயின்!
#Earthquake
#Lanka4
#sri lanka tamil news
#Morocco
Dhushanthini K
2 years ago

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு மீட்பு குழுக்களை அனுப்பவுள்ளதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர், ஜோஸ் மானுவல் அல்பரேஸ், இது ஸ்பெயினின் ஒற்றுமை மற்றும் நட்பு உணர்வின் அறிகுறியாகும் என்றும் ஸ்பெயின் மக்களை மொராக்கோ மக்களுடன் ஒன்றிணைக்கிறது” எனவும் கூறியுள்ளார்.
முதலில் நாங்கள் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பவுள்ளோம். மறுகட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது ஸ்பெயின் உதவி செய்யும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸ்பெயினின் இராணுவ அவசரநிலைப் பிரிவின் (UME) 65 உறுப்பினர்களை மொராக்கோவிற்கு உடனடியாக அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.



