குண்டுத்தாக்குதலை திசை திருப்பாதே,உண்மையை உலகறியச் செய்” : மட்டகளப்பில் ஆர்ப்பாட்டம்!
#Easter Sunday Attack
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குல் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக்கோரி மட்டகளப்பில் இன்று (10.09) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“குண்டுத்தாக்குதலை திசை திருப்பாதே, உண்மையை உலகறியச் செய்” எனும் தொனிப்பொருளில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால், இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, கல்லடி பாலம் வரை முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணியில், சனல்-04 காணொலிக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.