உலக முடிவைப் பார்க்கச் சென்ற வைத்தியர்கள் குழுவிற்கு ஏற்பட்ட விபத்து

மடோல்சிமவில் உலக முடிவைப் பார்க்கச் சென்ற வைத்தியர்கள் குழுவொன்று சிக்கலை எதிர்கொண்டதாக மடோல்சிம பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
வைத்தியர்கள் பயணித்த கார் மீது மரத்தின் பெரிய கிளை முறிந்து வீழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர்உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடோல்சிம பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய வைத்தியரே விபத்தில் சிக்கியுள்ளார்.
நேற்று (09) பிற்பகல் பல்கலைக்கழக நண்பர்களான எட்டு வைத்தியர்கள் இரண்டு கார்களில் உலக முடிவைக் காணச் சென்று கொண்டிருந்த போது, மடோல்சிம கொக்ககல தீன்வத்த பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று கார் ஒன்றின் மீது விழுந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் மத்திகஹதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கியதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் லக்மால் ஹேவகே உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.



