ஞான குழந்தையாகிய சுதர்சன் அருணனின் மலேசிய பயணத்திற்கு உதவிய தியாகி அறக்கட்டளை நிறுவனம்

#Lanka4 #இலங்கை #லங்கா4 #வாமதேவன் தியாகேந்திரன் #Thiyagendran Vamadeva #TCT
ஞான குழந்தையாகிய சுதர்சன் அருணனின் மலேசிய பயணத்திற்கு உதவிய தியாகி அறக்கட்டளை நிறுவனம்

சுதர்சன் அருணன் என்ற இந்த 6 வயது நிரம்பிய மாணவச்சிறுவன் பல தேசிய மட்டத்தில் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்று பெற்றோரின் நல்ல வளர்ப்பு மற்றும் பிரபஞ்சத்தின் ஆசீர்வாதத்துடன் ஞானக்குழந்தை என்ற பெயர்பெற்று இருக்கிறான்.

 இவரின் வெளிநாட்டு போட்டிப்பரீட்சையொன்றிற்கு நிதிபற்றாக்குறை காரணமாக தியாகி தாத்தாவை சந்தித்துள்ளார். இவரின் பெற்றோருடன் இவர் தியாகி தாத்தாவை சந்தித்து வரும் மார்கழி மாதம் மலேசியாவிற்கு செல்வதற்கான உதவியை ஒரு பேரன் என்ற முறையில் கேட்டுள்ளார்.

 சுதர்சன் அருணன் என்ற ஞானக்குழந்தைக்கு தியாகி அறக்கட்டளையிலிருந்து பயணச்செலவாக கிட்டத்தட்ட 6 இலட்சம் ரூபா தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் வழங்கப்படவிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

images/content-image/1694272418.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4