சீரற்ற வானிலையால் 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
#SriLanka
#weather
#Rain
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 6,300 க்கும் மேற்பட்ட மக்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின்படி, மோசமான வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4,300 க்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.