கசிப்புக் காய்ச்சிய முன்னாள் சிறைக்காவலர் கைது

#SriLanka #Arrest
Prathees
1 year ago
கசிப்புக் காய்ச்சிய முன்னாள் சிறைக்காவலர் கைது

பாரிய வீடொன்றில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த முன்னாள் சிறைக்காவலர் ஒருவர் நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

 சுமார் 13 இலட்சம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 9 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பல வடிகட்டி உபகரணங்களுடன் ஒன்பது பேரல்களுடன் கைது செய்யப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்டவர் புலத்சிங்கள கந்தன்வாடிய பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமானவர் எனவும், அங்கு இடம்பெற்ற சம்பவம் காரணமாக பணி இடைநிறுத்தப்பட்ட சிறைக்காவலர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் புலத்சிங்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து திரும்பியவர் எனவும் புலத்சிங்கள நகரின் பல இடங்களுக்கு பாரியளவில் கசிப்பு விநியோகம் செய்யும் நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 கைப்பற்றப்பட்ட வடிகட்டி உபகரணங்களில் ஒன்பது கோடா பீப்பாய்கள், ஒன்பது எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு அடுப்பு ஆகியவை உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!