ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூன் இது குறித்து சாணக்கியன் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

சிறையில் இருந்து பிள்ளையான் விடுதலை செய்வதையும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதையும் இலக்காக கொண்டே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், ஆட்கொலை படைப் பிரிவான ரிப்பொலி பிளட்ரூன் தொடர்பாக அதிபர் ஆணைக்குழுக்களிடம் முன்வைத்த விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூன் இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூனை எடுத்துக்கொண்டால், அது ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல. ரிப்போலி பிளட்ரூன் 2015 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டுவருகின்றது.
ரிப்போலி பிளட்ரூனில் காத்தான்குடியை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரான பாயிஸ் என்பவர் இருந்தார். ஏறாவூரை சேர்ந்த சமாட் என்பவர் இருந்தார். ஒட்டமாவடியை சேர்ந்த கலீல் என்பவர் இருந்தார்.
ரிப்போலி பிளட்ரூன் ஊடாக காத்தான்குடி, மாத்திரமல்ல, மட்டக்களப்பில் பாரிய அளவில் மக்கள், தேவைக்கு ஏற்றவாறு கொலை செய்யப்பட்டனர்.



